அதைதொடர்ந்து கருக்கா வினோத் மீது 9க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி கிண்டி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தனியாக கடந்த நவம்பர் 14ம் தேதி வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இருந்தாலும், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை மாநகர காவல்துறையிடம் என்ஐஏ அதிகாரிகள் கேட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட கருகா வினோத்தின் வாக்குமூலம் அடங்கிய ஆவணங்களை பெற்றதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓரிரு நாட்களில் என்ஐஏ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.