சென்னை : தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு அவசர முறையீடு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் முறையீட்டை பிற்பகலில் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி ரமேஷ் அறிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டுவதாகக் கூறி என்ஐஏ சோதனை நடத்தியது. என்ஐஏ அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் சோதனையில் ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது.