சென்னை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹிஜ்புத் தகர் என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனையில் ஈடுபட்டுள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை 5 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘ஹிஜ்புர் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்ஐஏ தரப்பிலிருந்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.