சென்னை: 2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. சென்னை பெருநகரில் அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 18,000 காவலர்களுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார்