சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், அரசின் புதிய விதிகளுக்கு ஏற்ப தனது வாகனங்களை மேம்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் சுசூகி வி-ஸ்டிரோம் எஸ்எக்ஸ், ஜிக்ஸர் 250 சீரிஸ் மற்றும் பர்க்மன் ஸ்டிரீட் இஎக்ஸ் ஆகியவற்றில் இன்ஜினை மேம்படுத்தியுள்ளது. இதன்மூலம், இந்த டூவீலர்களில் இனி 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த முடியும்.
இதற்கு முன்பு அக்சஸ் 125, பர்க்மன் ஸ்டிரீட், அவனிஸ் மற்றும் இதர ஜிக்ஸர் பைக்குகளை மேம்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனத்தின் அனைத்து பைக்குகளும், 20 சதவீத எத்தனால் பயன்படுத்த ஏற்ற வாகனங்களாக மாறியுள்ளன. இது மட்டுமின்றி, புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின்படி, இந்த வாகனங்களில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.