சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா அழைப்பிதழில் ஜனாதிபதி பெயர் கூட இல்லை; அவரை இப்படி அவமதிப்பது சரியா? என்று ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தனக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவர் ஜனாதிபதிதான் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.