இதனால் ராம் ராஜேஷ், சம்பந்தப்பட்ட ஷோரூமில் தொடர்ந்து புகார் அளித்ததன்பேரில், கார் ஷோரூமில், கார் பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல ராம் ராஜேஷ், புதிய எலக்ட்ரிக் காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மீண்டும் கார் நடுரோட்டில் பழுதாகி நின்றதால், சம்மந்தப்பட்ட குரோம்பேட்டை மகேந்திரா ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டருக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
ஆனால் ஷோரூம் ஊழியர்கள் புகார் அளித்த, 6 மணி நேரத்திற்கு பிறகு வந்து, காரை எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜேஷ், குரோம்பேட்டை மகேந்திரா ஷோரூமிற்கு சென்று, ஊழியர்களிடம் ஏன் இவ்வாறு அடிக்கடி கார் பழுதாகி விடுகிறது, என்று கேட்டுள்ளார். அப்போது, ஊழியர்கள் சரியாக பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராம் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கார் ஷோரூம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராம் ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.