விழுப்புரம் சரகத்திற்கு புதிய டிஐஜி

சென்னை: விழுப்புரம் சரகத்திற்கு புதிய டிஐஜியாக ஜியா உல்ஹக் நியமனம் ெசய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த ஜியா உல்ஹக், விழுப்புரம் டிஐஜியாக நியமிக்கப்ட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுகாதர், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பதவியை கூடுதலாக கவனிப்பார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி பதவியை கூடுதலாக கவனிப்பார் என்று உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்