இவற்றில் இ-எப்ஐஆர்களும் அடங்கும். மேற்கண்ட எண்ணிக்கையில் எப்ஐஆர்கள் பதிவு செய்வது வழக்கமான நடைமுறைதான் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு டெல்லியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் முதல், நிஹால் விஹார் பகுதியில் நடந்த பயங்கர விபத்து வரை பல வழக்குகள் பதிவாகி உள்ளன. முன்னதாக நேற்று முதல் எப்ஐஆர் டெல்லி சாலையோர வியாபாரி மீது பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த எப்ஐஆர் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ‘புதிய சட்டத்தின் முதல் வழக்கு குவாலியரில் பதிவு செய்யப்பட்டது’ என்றார்.