சென்னை: புதிய ராக்கெட் ஏவுதளமான குலசேகரப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீட்டை கருத்தில் கொண்டு விண்வெளிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.