அதனை ஏற்றுக்கொண்ட அவர் உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு, இந்திரா காந்தி தெருவில் செயல்பட்டு வந்த பழைய கடிதத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலரும், பொதுக்குழு உறுப்பினருமான எத்திராஜ், ஒன்றிய கவுன்சிலர் பூவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கி புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்காக முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
இதில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், சீனிவாசன், சுகுமார், சவுந்தரராஜன், குருபரதன், தியாகராஜன், பிரபு, சங்கர், சரவணன், கார்த்தி, சதீஷ், சிவப்பிரகாஷ், முருகன், பாலச்சந்தர், ரஜினி, செந்தில் மற்றும் பூங்காநகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கட்டுமானப் பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு வரும் மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நியாய விலைக்கடை திறந்து வைக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.