எப்போதும், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். தற்போது. மழை காலம் துவங்கியுள்ளதால் காவல் நிலையத்தில் கொசு தொல்லை அதிகமாகவே உள்ளது. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களை பகல் நேரத்தில் கொசுகள் கடித்து தலை, கை, கால், உடம்பு என அனைத்து இடங்களும் வீங்கி விடுகின்றன. காவல் நிலையத்திற்க்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் பூச்சி கடித்தும், கொசுக்கள் கடித்தும் உடம்புகள் வீக்கமடைந்து வருகின்றது.
எனவே, காவல் நிலையம் செல்லும் காவலர்களும், புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் விஷ ஜந்துகளிடம் இருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். எனவே, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது திறக்கப்படும் என அனைவரும் எதிர்ப்பில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரனீத் தனி கவனம் செலுத்தி காவல் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.