இந்திய ஜனநாயக புலிகள் என்று எனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளேன். சுமார் 15 ஆயிரம் உறுப்பினர்கள் என் கட்சியில் உள்ளனர். வரும் 24ம் தேதி பல்லாவரத்தில் முதல் மாநாடு நடக்க உள்ளது. தேசிய அளவில் எனது கட்சி இயங்கும். மனித உரிமைகளை காக்கும் விதமாகவும் இருக்கும். ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிராக கண்டிப்பாக இருக்காது. தமிழக மீனவர்களை இலங்கை அரசு துன்புறுத்துகிறது. அதனை கண்டித்து எனது கட்சியின் சார்பாக நடவடிக்கை எடுப்போம். வரும் மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளோடு கூட்டணி வைத்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.