சென்னை: புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நெறிமுறைப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பானது நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது. ஆங்கிலத்தில் இருந்த சட்டங்களின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றியது அப்பட்டமான இந்தி திணிப்பு. சமஸ்கிருதம், இந்தி கலந்த சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும். இந்தி திணிப்பானது பல மொழி, கலாசாரம் கொண்ட நமது தேசத்தின் அடிப்படை நீதி, அரசியலமைப்புக்கு எதிரானது.