புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 11 பேர் பலியாகி உள்ளனர். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 6,155 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 259ஆக அதிகரித்துள்ளது. தற்போது 31,194 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு 11ஆக பதிவாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 954ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.