சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கிருஷ்ணசாமி மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன்னை பற்றி சமூகவலைத்தளத்தில் கிருஷ்ணசாமி அவதூறு கருத்து பதிவு செய்துள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.