சென்னை: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கறிஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திமுக வழக்கறிஞரணியின் போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றுள்ளனர்.