புதிய பேருந்துநிலைய சாலையில் பள்ளங்களால் பதறும் வாகன ஓட்டிகள்

*உடனே சீரமைக்க கோரிக்கை

ராஜபாளையம் : ராஜபாளையம் புதிய பேருந்து நிலைய சாலையில் பள்ளங்கள் காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை பல இடங்களில் சேதமடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சில வாகன விபத்துகளில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன.

பல்வேறு திட்ட பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு பல இடங்களில் பள்ளங்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலை பள்ளங்கள் குறித்து பலமுறை புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. சாலையை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆகவே உடனடியாக திட்டப் பணிகளை விரைவில் முடித்து சாலை பகுதியை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?