சென்னை: சுதந்திரத்திற்கான காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை; நேதாஜியே தேசத்தந்தை என சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 1942 ஆம் ஆண்டுக்கு பின்னர் காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.