அந்நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி, பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 30 நாட்கள் அவகாசம் கேட்கலாம். இதுவரை ஒன்றரை ஆண்டு ஆட்சியில் 3 முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வெற்றி பெற்றுள்ளார். நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது புதியது அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை அங்கு ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு புதிய அரசு அமைந்து உள்ளது. மொத்தம் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாளம் நாடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு 89 உறுப்பினர்கள் உள்ளனர். நேபாளம் கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் மற்றும் லெனின்ஸ்ட் கட்சிக்கு 78 உறுப்பினர்களும், பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாளம் காங்கிரஸ்- மாவோயிஸ்ட் கட்சிக்கு 32 உறுப்பினர்களும் உள்ளனர்.