சென்னை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் நிர்வாக இயக்குனர்கள் கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஜோஸ் தங்கையா தலைமையிலான தனிப்படையினர் சென்னையில் கைது செய்தனர். நியோமேக்ஸ் மற்றும் துணை நிறுவனங்கள் என 25 நிறுவனங்களை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நியோமேக்ஸ் மோசடி வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.