இந்த வழக்கில் இது வரை 35 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிளை நிர்வாகிகள் இசக்கி மற்றும் அகிலா ஆகிய இருவரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் மதியம் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கின் இறுதி கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் திடீர் திருப்பமாக சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் ஆறு பற்களை காணவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு பற்களை காணவில்லை என்பதால் அவரை யாராவது கடத்திச் சென்று கடுமையாக தாக்கி கொலை செய்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.