நெல்லை: குடும்பத் தகராறில் மனைவியை தீயிட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீதபற்பநல்லூரில் 2020இல் மனைவி ஜெயாவை மண்ணெண்ணை ஊற்றி கொன்றதாக சுரேஷ் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நெல்லை மகளிர் நீதிமன்றம் சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.