நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் ஆனித்தேரோட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வடம் அறுந்தது. நெல்லையப்பர் தேரில் அறுந்த வடத்தை மாற்றி புதிய வடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. திருத்தேரில் நெல்லையப்பர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.