அதன்படி திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், நெல்லை புறநகர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை-ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், தாம்பரம் காவல் ஆணையரக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன், மணிமங்கலம் காவல் உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம், ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி, வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிமங்கலம் டிஎஸ்பி ராஜபாண்டியன் ஈரோடு சிவில் சப்ளைஸ் சிஐடியாகவும், நாகப்பட்டினம் டிஎஸ்பி சுபாஷ்சந்திரபோஸ் வேதாரண்யம் டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி-முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சென்னை போலீஸ் அகாடெமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.