நெல்லை : நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் வடம் அறுந்தது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பக்தர்கள் ஒட்டுமொத்தமாக இழுத்ததாலேயே நெல்லையப்பர் தேர்வடம் அறுந்தது. தேர்வடத்தை நெம்புகோல் தருவதற்கு முன்னதாக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்துவிட்டனர். நெல்லையப்பர் தேர் 450 டன் எடை கொண்டது; அதற்கான வடம் கயிறால் மட்டுமே அமைக்க முடியும்,”இவ்வாறு தெரிவித்தார்.