நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியது, மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 ரேசன் கடைகளில் 63 ரேசன் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.