சென்னை: நெல்லை துலுக்கர்பட்டி அகழ்வாய்வில், தமிழி எழுத்தில் புலி என பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை கிடைத்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொருநை கரையில் நிலவிய ஆதிச்சநல்லூர் பண்பாட்டு காலத்தை நிலை நிறுத்துவதில் அகழாய்வு பெரும் துணை புரிகிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில் துலுக்கர்பட்டியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.