இங்கு செயல்பட்டு வந்த சரக்கு கொட்டகை மூலம் வெளிமாநிலங்களிலிருந்து உரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டு அங்கேயே அடுக்கி வைத்து பின் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.770 கோடி செலவில் மருவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது அங்கிருந்த சரக்கு கொட்டகை அருகில் உள்ள கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த இந்த சரக்கு கொட்டகை இயங்கி வரும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.