நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உணவு வாங்க வரிசையில் நிற்கும்போது கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது. மோதலில் காயமடைந்த தடுப்புக் காவல் கைதி பேரின் பராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.