பரவலாக பெய்து வந்த மழை காரணமாக குளுகுளு காற்று வீசியது. அக்னி நட்சத்திர காலம் முழுவதும் மழைக் காலமாக கழிந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. நெல்லையில் நேற்று பகலில் வெப்பநிலை 101.3 டிகிரி பதிவானது. இதனால் கடந்த சில நாட்களாக காற்று வாங்கிய இளநீர் விற்பனை மீண்டும் சக்கை போடு போடுகிறது. இளநீர் கடைகளில் உள்ளூர் இளநீர் ரூ.30 முதல் 40 வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. பொள்ளாச்சி இளநீர் ரூ.40 முதல் 60 வரை விற்பனையாகிறது.
இளநீர் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இளநீர் கடைகள் மட்டுமல்லாது கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வாங்கி வரும் வியாபாரிகள் ரோட்டோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் வெப்பநிலை அதிகரிப்பால் இரவு நேரங்களில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களை மின்சார பயன்பாடும்
அதிகரித்துள்ளது.