டெல்லி: நீட் முறைகேடு விவகாரத்தில் ஜூன் 24-ல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட காங்கிரஸ் மாணவரணி முடிவு செய்துள்ளது. நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் மாணவரணி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் இருந்த மகாத்மா காந்தி சிலையை இடமாற்றியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார்.