டெல்லி: நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையானது. பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை விரிவான விசாரணைக்காக சிபிஐயிடம் ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒப்படைத்திருந்தது.