சென்னை: முதுநிலை நீட் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை திடீரென ஒத்திவைத்ததால் நாடு முழுவதும் தேர்வு எழுதும் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை எட்டாக் கனியாக மாற்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.