டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இளைஞர் காங்கிரஸார் குற்றம்சாட்டியுள்ளனர். முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. நீட் தேர்வு எழுதியவர்களில் சில மாணவர்களுக்கு முரண்பட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.