தஞ்சாவூர்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் SFI அமைப்பு மாணவர்கள், திருவாரூர் மன்னார்குடி மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.