இதில் தமிழ்விழி வெற்றி பெற்றார். இவருக்கு குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி தமிழ்விழிக்கு படிப்பு செலவான ரூ.2.50 லட்சம் செலவை தமிழக அரசே ஏற்கிறது. தமிழ்விழிக்கு நாளை (7ம் தேதி) கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை நந்தகுமார் கூறும்போது, நான் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைக்கிறேன். நான் வறுமையில் இருந்தாலும் என் மகளை ஆட்டோ விற்று படிக்க வைத்தேன். தற்போது எனது மகள் தமிழ்விழி நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நீட் சிறப்பு வகுப்பு செல்லாமல் வீட்டிலேயே படித்து வெற்றி பெற்றார். மேலும் குமாரபாளையம் பல் மருத்துவமனையில் நடக்கும் கவுன்சிலிங்கில் எனது மகளை சேர்க்க வேண்டும். அவரது படிப்பு செலவை ஏற்ற தமிழக அரசுக்கு எங்கள் நன்றி என்றார்.