சென்னை: நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்று ஆ.ராசா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். தொடக்கத்தில் இருந்து நீட் தேர்வை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. “கல்வித்துறை நடவடிக்கையில் நீட் தேர்வு என்பது மிகப்பெரிய மோசடி. பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களை மீண்டும் ஒரு தேர்வுக்கு நிர்பந்திக்கிறது நீட். வடமாநிலங்களில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதை நீட் தேர்வு வெளிக்கொண்டு வந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.