ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நிதின் என்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற சிகார் மாவட்டத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் கடந்த ஜூன் மாதம் சேர்ந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், அவர் தான் தங்கியிருந்த விடுதியின் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.