பாட்னா : பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு மாணவருக்கு ரூ 30 லட்சம் வரை பணம் கைமாறியது முதற்கட்ட விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. கைதான மாணவர்கள் சில பாடங்களில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றதும் தெரியவந்துள்ளது. தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக வினாத்தாள் கிடைத்ததால் அதில் உள்ளதை மட்டும் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.