அதில், இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட ஏழு நபர் குழு வரும் 30ம் தேதிக்குள் பரிந்துரை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “நீட் தேர்வுகளை குளறுபடிகள் இன்றி நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், கல்வியாளர்களிடமிருந்து 37,000 கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை குழு தாக்கல் செய்ய வேண்டும் இதனால், அறிக்கை தாக்கல் செய்ய மேலும் மூன்று வாரம் அதாவது அக்டோபர் 21ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.