மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கட்டண படுக்கைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டண அடிப்படையில் நடுநிலை மக்களுக்கான கட்டண படுக்கைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்தும், அதற்கான விளக்கமும் திருப்திகரமாக இல்லை. நீட் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறது.