சென்னை: நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள் பற்றி ஒன்றிய அரசுக்கு கவலையில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். ஆதிக்க காரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவராகும் வாய்ப்பை இழந்து உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.