மேலும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ரூ. 300 கோடி வரை இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாகவும், 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விற்க திட்டமிட்டதாகவும் வினாத்தாள் மோசடிக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட பிஜேந்தர் குப்தா பரபரப்பு தகவல் அளித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய சஞ்சீவ் முக்யாவை பிடிக்க முடியாது எனவும் பிஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு குறித்து மார்ச் மாதத்திலேயே வீடியோ வெளியிட்டவர் பிஜேந்தர் குப்தா. வினாத்தாள் திருட்டு மற்றும் விற்பனையில் 24 ஆண்டுகளாக ஈடுபட்டு வருபவர் பிஜேந்தர் குப்தா ஆவார். உத்தரப் பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த பிஜேந்தர் குப்தா அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் அரசு தேர்வுகள் மாஃபியா கும்பலின் தயவில் நடப்பதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் குற்றசம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை ஆதரிப்பவர்கள், வினாத்தாள் மோசடி கும்பலை ஊக்குவிக்கிறார்கள். வினாத்தாள் மோசடி கும்பல், நாட்டின் எதிர்காலமான இளைஞர்களின் வாழ்க்கையை சிதைகின்றன. கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் ஊடுருவல் காரணமாக தகுதிவாய்ந்த இந்தியர்கள் பாதிப்பிறகு உள்ளாகி உள்ளனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.