டெல்லி; நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஹசாரிபாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான் உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தேசிய தேர்வு முகமையின் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளனர்.