சென்னை : எடப்பாடி பழனிசாமியால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,”நீட் தேர்வு குளறுபடியால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது.நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி ஆகும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.