டெல்லி : நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.