நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

மாதவரம்: நீட் தேர்வு விவகாரத்தில் பல்வேறு மாணவ அமைப்புகள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் வடசென்னை மாவட்டம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் பெருமன்றத்தின வடசென்னை மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அதன் மாநில தலைவர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதில் நீட் தேர்வை உடனடியாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை