டெல்லி: மாணவர்களிடம் நீட் தேர்வுக்கு ரூ.400 கோடி வசூலித்து விட்டு வினாத்தாளை ரிக்ஷாவிலா அனுப்புவீர்கள்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீட் வினாத்தாள் விற்பனையால் 150 மாணவர்கள் பயன்பெற்றதாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், நீட் வினாத்தாள் விற்பனை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் பலமணி நேரமாக விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வில் பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும் என நீதிபதி கூறியுள்ளார்.