டெல்லி: நீட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவரின் விடைத்தாளே மாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர் குற்றச்சாட்டு வைத்து வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீட் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது.